Posts

Showing posts from January, 2026

எழுத்தாக, வா இறைவா!

அறிந்தவை பகிரப்படும் அறியாதவற்றைத் தேடிப் பயணப்படும் இந்த எழுத்து பயணத்தில், சமுதாய விளைச்சல்களை  பிரித்துணரும் வண்ணம் மறுக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் ஒடுக்கப்படுபவர்களின் ஒட்டுமொத்த வலி என்பதை உணர்ந்து, அவற்றை எழுத்துக்களின் வழியே  அறுத்தெரியப்பட  வேண்டும் என்று  ஈகையாளனாம் ஏக இறைவனிடம் எழுத்துருகி இறைஞ்சுகின்றேன்! ஞாலத்தை புரிந்துணர ஞானத் துளிக்கொடுத்து, காலத்தை வென்றெடுக்க கருணை மழை தொடுத்து, உள்ளத்தை சுத்திகரிக்க அறியாமை இருல்   விடுத்து, தெள்ளத் தெளிவாக்கும் அறிவை நீ எனக்கு புகுத்து! கற்றதும் அறிவின் கண் கசடறப் பெற்றதும்,  உற்றதும் அதன் வழி நிலைத்து நிற்றலும், சுற்றமும் சோம்பலாக்கா நெர்மறை சூழலும், நித்தமும் எனக்கழித்து துணை புரிவாய்  முற்றிலும்! எழுத்துக்களின் வேர்களில் ஈரம் கனிந்திடும், எடுத்துரைக்கும் பாங்கில் வீரம் கசிந்திடும், புலப்படும் யாவும் புறப்பட தோன்றிடும், கலப்படமில்லா படைப்புகள் பல புனைந்திட வாரும்! தரிசு மனங்களை தூசு தட்டி எழுப்பிட, கரிசனம் அற்ற கள்வனை காலம் பார்த்து வீழ்த்திட, சிறுசு பெருசு பாரும் சிற்றறிவை அறவே துடைத்திட, ச...